• Home
  • News
  • Crime & Law
  • தெலுங்கானாவில் 6 கொலைகள்: ராஜ்குமார் மீது புதிய தகவல்கள்

தெலுங்கானாவில் 6 கொலைகள்: ராஜ்குமார் மீது புதிய தகவல்கள்

ALN NEWS DESK
ALN NEWS DESK
Updated : Jul 13, 2026, 02:32 PM IST
4 min read
  • linkedin
  • twitter
  • facebook
  • instagram
  • whatsapp

தெலுங்கானா மாநிலத்தில் ராஜ்குமார் 6 பேரைக் கொலை செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த கொலைகள் தொடர்பான புதிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

(எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள செய்திகள் உங்களை சங்கடத்துக்கு உள்ளாக்கலாம்)

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் ராஜ் குமார் என்ற இளைஞர் ஆறு பேரைக் கொலை செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜூலை 10ஆம் தேதி இரவு முதல் 11ஆம் தேதி காலைக்கு இடைப்பட்ட நேரத்தில் பி. ராஜ்குமார் ஆறு பேரைக் கொலை செய்ததாக ஃபியூச்சர் சிட்டி காவல் ஆணையரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

"இந்த ஆண்டு மே 16 அன்று ராஜ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் முதலில் அந்த வழக்கை தொடர்ந்த சிறுமியின் தாயையும் பாட்டியையும் கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து அச்சிறுமியை தைவாலாகுடா என்ற மற்றொரு கிராமத்திற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள ஒரு குளத்தின் அருகே அவரை கொலை செய்துள்ளார். அதன் பிறகு அதே கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தனது மனைவி மற்றும் இரு சிறு குழந்தைகளைக் அவர் கொலை செய்துள்ளார். இவை அனைத்தும் இரவு 11 மணி முதல் 12 மணிக்குள் நடந்தன" என்று காவல்துறை தெரிவித்தது.

காவல்துறை பகிர்ந்த தகவல்களின் அடிப்படையில் குற்ற நிகழ்வு இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.

முதல் இடம்

ஷாபாத் என்பது தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு மண்டல தலைமையகம் ஆகும். இது ஒரு தொலைதூர கிராமமோ அல்லது சுற்றிலும் வீடுகளும் மக்களும் இல்லாத ஒரு இடமோ அல்ல.

சாலைக்கு சற்று அருகில் இருந்த ஒரு வீட்டில், இரண்டு சிறுமிகள், அவர்களின் தாய் மற்றும் பாட்டி என மொத்தம் நான்கு பெண்கள் வசித்து வந்தனர்.

அந்த நால்வரில் ஒருவர் 17 வயது சிறுமி. மற்றொரு 19 வயதுப் பெண் மாற்றுத்திறனாளி. அவர் உடல்ரீதியாவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஜூலை 10ஆம் தேதி இரவு 11 மணியளவில் ராஜ் குமார் அங்கு ஒரு காரில் வந்துள்ளார்.

அவர் பயன்படுத்தியதாகக் கருதப்படும் பீர் டின் (கேன்) வீட்டின் திண்ணையில் கிடந்தது. 17 வயது சிறுமியை வீட்டிலிருந்து வெளியே அவர் இழுத்துச் செல்ல முயன்றபோது, அவரது தாயும் பாட்டியும் குத்திக் கொலை செய்யப்பட்டனர்.

அந்த வீடு முழுவதும் ரத்தக் கறையாக இருந்தது. தன் தாயும் பாட்டியும் இறந்துவிட்டதும், யாரோ தன் தங்கையை இழுத்துச் சென்றுவிட்டதும் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்குத் தெரிந்ததா என்பது குறித்துத் தெரியவில்லை.

அலறவோ நகரவோ முடியாமல், அந்தப் பெண் ரத்த வெள்ளத்தின் நடுவே கிடந்தார்.

இரண்டாம் இடம்

ராஜ் குமார் தான் கடத்திய 17 வயது சிறுமியை ஒரு காரில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள தைவாலாகுடா என்ற கிராமத்திற்கு சென்றார்.

அந்தக் கிராமத்தின் எல்லையில் ஒரு குளம் உள்ளது. அதில் மிகக் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக அதில் கற்களை அமைத்துள்ளனர்.

அந்த கற்களுக்கு அருகில் வைத்து அச்சிறுமி ராஜ்குமார் கொலை செய்தார்.

அங்கு ரத்தக் கறை இன்னும் அப்படியே உள்ளது.

மூன்றாம் இடம்

அதே கிராமத்தில் அரை கிலோமீட்டர் தொலைவில் ராஜ்குமாரின் வீடு உள்ளது. அவரது மனைவியும், இரண்டு மகன்களும் கட்டிலில் படுத்திருந்தார்கள்.

அங்கு அப்படி என்ன சண்டை நடந்திருக்கும் என்று ஆச்சரியமாக இருக்கிறது. அந்த இரண்டு சிறு குழந்தைகளும் படுக்கையில் தூங்கிக் கொண்டிருப்பது போல தெரிகிறது. ஆனால் உண்மையில், அந்த குழந்தைகளின் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது.

அந்தக் காட்சியைக் பார்த்த அனைவரும் மனமுடைந்தனர்.

பல கொலை வழக்குகளைக் கையாளும் காவல்துறையினர், பிரேதப் பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் மற்றும் செய்திகளைச் சேகரிக்கும் செய்தியாளர்களாலும் கூட, அந்த நிலையில் அச்சிறு குழந்தைகளைக் காண முடியவில்லை. குழந்தைகளின் தாய் அதே படுக்கையில் அவர்கள் அருகில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அவர்தான் ராஜ் குமாரின் மனைவி.

அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கொன்றுள்ளார். குழந்தைகள் அணியும் அந்தச் சிறிய காலணிகள் வீட்டின் வெளியே சிதறிக் கிடக்கின்றன.

அங்கு அவர்களின் பொம்மைகளும் கார்களும் உள்ளன.

அந்த பொம்மைகளும் காலணிகளும் இறந்துபோன குழந்தைகளை எனக்கு நினைவூட்டுகின்றன.

அவர்களைக் கொலை செய்த ராஜ் குமார், தனது தந்தையைத் தொலைபேசியில் அழைத்து தான் கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார்.

அவரது தந்தை இந்த விஷயத்தை காவல்துறையில் புகார் செய்தார்.

காவல்துறையினர் இரண்டு இடங்களுக்கும் சென்று வழக்கை விசாரிக்கத் தொடங்கினர். அவர்கள் இரண்டு குடும்பத்தினரிடமிருந்தும் புகார்களைப் பெற்றனர்.

உடல்களுக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகளும் நிறைவடைந்துள்ளன.

இந்த மூன்று இடங்களில் நடந்த ஆறு கொலைகளும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.

ஒரே வீட்டில் வசித்து வந்த மூன்று தலைமுறைப் பெண்களையும், தனது சொந்த வீட்டில் தனது மனைவி மற்றும் குழந்தைகளையும் கொலை செய்த, சந்தேகத்துக்கு இடமான அந்த நபரைக் காவல்துறையினர் தேடி வருவதாக ஃபியூச்சர் சிட்டி கமிஷனர் அலுவலகம் அறிவித்துள்ளது.

சிறுமியைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட சிவப்பு நிற கார், சேகுரு கிராமத்தில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகில் காவல்துறையினரால் கண்டறியப்பட்டது.

ராஜ் குமார் இருக்கும் இடம் குறித்த தகவலை வழங்குபவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பாரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ் குமார் இந்த கொலைகளைத் திட்டமிட்டு செய்தாரா? அவருக்கு யார் உதவியது? அந்தச் சிறுமியால் ஏன் சத்தமாக அலற முடியவில்லை? அவர் ஏன் தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கொன்றார்? போன்ற பல கேள்விகள் உள்ளன. இவை அனைத்தும் விசாரணையின் போதுதான் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

17 வயது பெண்ணுடன் அறிமுகம் எப்படி?

பி. ராஜ் குமாரின் சொந்த ஊர் தைவாலாகுடா.

அவர் தன்னை விட வயது மூத்தவரான, அதே கிராமத்தைச் சேர்ந்த சரிதா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

"அவர்களின் காதல் எவ்வளவு காலம் நீடித்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் மிகவும் வசதியானவர்கள். நாங்கள் அப்படி இல்லை. ஆனால் எனது தங்கை நன்கு படித்தவர். அந்த நேரத்தில், அவள் பி.எட் படித்துவிட்டுப் பாடம் சொல்லிக்கொடுத்தார்.

அவர் என் தங்கையைத் திருமணம் செய்த பிறகு, நான் அவர்களுடன் நீண்ட நாட்களாகப் பேசவில்லை. என் தாயார் மட்டும் அவரைப் போய்ப் பார்த்து, நல்லது கெட்டதுகளை விசாரித்து வருவார்" என்று சரிதாவின் சகோதரர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால், அவர்கள் தங்கள் சொந்த ஊரைத் தவிர்த்து வேறு ஏதோ ஒரு இடத்தில் குடியேறினர்.

தற்போது கொலை செய்யப்பட்டுள்ள குடும்பத்தினர் அவர்களுக்குப் பக்கத்து வீட்டில் வசித்து வந்தனர்.

அந்த 17 வயது சிறுமியின் தந்தை சில காலத்திற்கு முன்பு இறந்துவிட்டார்.

"அவர்கள் பக்கத்து வீட்டில் தங்கியிருந்ததும், அவர்களின் குழந்தைகள் இந்த வீட்டிற்கு வருவதும் எங்களுக்குப் பரிச்சயமான ஒன்றுதான். ஆனால் சிறுமியின் தந்தை இறந்த பிறகு, ராஜ் குமாரின் தொல்லை அதிகரித்தது. தொல்லையைத் தாங்க முடியாமல், சிறுமியைக் கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டிலிருந்தே படிக்க வைத்தோம். அவர் தேர்வுகள் முடிந்து திரும்பியபோது, அவர் சிறுமியின் கையைப் பிடித்து கல்லூரிக்கு வெளியே இழுக்க முயன்றார்.

அந்தச் சம்பவத்திற்காக மே 16 அன்று அவர் மீது நாங்கள் வழக்குத் தொடர்ந்தோம். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது, ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை. நாங்கள் எப்போது கேட்டாலும், ராஜ்குமார் தலைமறைவாக இருப்பதாகக் கூறினர். இதற்கிடையில், அவர் முன்ஜாமீனும் பெற்றிருந்தார். அவர் இனி உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டார் என்று கூறி காவல்துறையினர் எங்களை அனுப்பிவிடுவார்கள்.

அவரது சகோதரரும் சமரசத்திற்காக எங்களிடம் வந்தார், ஆனால் நாங்கள் அதற்கு உடன்படவில்லை. இறுதியாக, அவர் இப்படிப்பட்ட செயலைச் செய்துள்ளார்" என்று கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட 17 வயது சிறுமியின் மாமா பிபிசியிடம் தெரிவித்தார்.

சிறுமியுடன் ராஜ் குமாருக்கு பரஸ்பர சம்மதத்துடன் கூடிய உறவு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் அவர் பதிலளித்தார்.

"அந்தச் சிறுமிக்கு ராஜ் குமாரை சிறிதும் பிடிக்காது. ஒருவேளை பிடித்திருந்தால், அவள் எங்களிடம் சொல்லியிருப்பாள் அல்லவா? அவருடனேயே சென்றிருப்பார் அல்லவா? ராஜ்குமார் அவருக்குத் தொல்லை கொடுத்து வருவதாக அப்பெண்ணின் தாயாரே எங்களிடம் கூறினார். காவல்துறையினரிடமும் கூறினார்.

Get More Updates

To learn more about the latest developments in Crime & Law, stay updated with our exclusive reports and analyses on AiLensNews.

Related News